×

பல கொலை வழக்குகளில் தலைமறைவு பிரபல ரவுடி அதிரடி கைது

புழல்:செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சோலையம்மன் நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி முத்து சரவணன் கடந்த அக்டோபர் மாதம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது தம்பி கருப்பு (எ) கருப்பசாமி(27) மீது செங்குன்றம், சோழவரம், சென்னை ஏழுகிணறு, மடிப்பாக்கம் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவர் கடந்த 2017ம் ஆண்டு செங்குன்றம் அடுத்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சாலமன் (எ) சாலா கொலை வழக்கு, 2019ம் ஆண்டு செங்குன்றம் அடுத்த ஆட்டம் தாங்கள் கிராமத்தில் சாம் பிரசாத் என்பவரை கொலை செய்த வழக்கு உட்பட ஏழு வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

மேலும் செங்குன்றம் அடுத்த காந்திநகர் பகுதி சேர்ந்த அதிமுக பிரமுகர் கோட்டைசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் 2015ம் ஆண்டு முதல் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் பொன்னேரி நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு வழக்கு நிலவையில் உள்ளது. இந்நிலையில் பல நாட்களாக காவல்துறையிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி கருப்புசாமியை நேற்று சோழவரம் போலீசார் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பல கொலை வழக்குகளில் தலைமறைவு பிரபல ரவுடி அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Muthu Saravanan ,Cholayamman Nagar ,Nallur Panchayat ,Sengunram ,Karupu (A) Karuppasamy ,Senkunram ,Cholavaram ,Madipakkam ,Madipakkam Police ,
× RELATED ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்து வாலிபர் பலி